සිංහල தமிழ் English

அநுர மீட்டர் என்பது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு ஒன்லைன் கருவியாகும். இந்த வாக்குறுதிகளின் முன்னேற்றம் நான்கு மாதங்களுக்கு ஒரு தடவையும், ஒவ்வொரு பாராளுமன்ற வரவு செலவுத் திட்டத்திற்கும் பின்னர் புதுப்பிக்கப்படும். பிப்ரவரி 17, 2025 நிலவரப்படி மதிப்பீடு:

முன்னேற்ற நிலை:

100%
  • மாணவர் உதவித்தொகைகளையும் மஹபொலவையும் வாழ்க்கைச் செலவுக்கு எற்றவகையில் அதிகரித்தல்

    குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில் புலமைப்பரிசிலினை ரூபா 750 லிருந்து ரூபா 1,500 ஆக அதிகரிக்க நான் முன்மொழிகிறேன். இதற்காக ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 72)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • மலையக சமுதாயத்திற்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான காணிகளை வழங்குதல்

    பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ரூபா 4,267 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 87)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு மாதாந்தம் ஆகக் குறைந்த பெறுமதியாக ரூ. 10,000ஐக் கொண்ட மானிய நிதியுதவி

    வறியவர்கள் மற்றும் மிக வறியவர்கள் ஆகிய இரு சமூகக் குழுக்களுக்கும் வழங்கப்படும் மாதாந்த காசுக் கொடுப்பனவானது முறையே ரூபா 8,500 முதல் ரூபா 10,000 வரையும் ரூபா 15,000 முதல் ரூபா 17,500 வரையும் 2025 சனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 78)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • பங்கேற்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் திறமையான பயனாளி தேர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துதல். (வறுமைத் திட்டத்திற்கு)

    அரசாங்கக் கொள்கையின்படி, அரசாங்க நிதி மற்றும் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி 1.2 மில்லியன் "அஸ்வெசும" பயனாளிகள் வலுவூட்டப்படுவார்கள். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி நிதியளிக்கும் கருத்திட்டங்களின் உதவியுடன், முன்னோடித் திட்டத்தின் கீழ் வலுவூட்டுவதற்காக சுமார் 25,000 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தகுதியுடைய குடும்பங்கள் உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி படிப்படியாக வலுவூட்டப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது, இதனடிப்படையில் வலுவூட்டல் நிழ்ச்சித் திட்டத்திற்கான ஒதுக்கத்தை ரூபா 500 மில்லியனால் அதிகரிக்க முன் மொழிகின்றேன். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 79)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • மானிய உதவிகள் தேவைப்படும் மூத்த பிரஜைகளுக்கு ரூ. 5,000 மாதாந்த கொடுப்பனவு

    சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை ரூபா 7,500 லிருந்து ரூபா 10,000 ஆகவும், முதியோருக்கான மாதாந்திர கொடுப்பனவுகளை ரூபா 3,000 லிருந்து ரூபா 5,000 ஆகவும் 2025 ஏப்ரல் முதல் அதிகரிக்க நான் முன்மொழிகிறேன். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 79)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் புதிய முதியோர் பராமரிப்பு நிலையங்கள்

    மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகளில், குறிப்பாக வயதான மக்களை இலக்காகக் கொண்டு, நோய்த்தடுப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகள் கிடைக்கும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 70)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கு சாதாரண வங்கி வட்டி வீதத்தை விட 5% அதிக வட்டி விகிதம்

    சிரேட்ட பிரசைகளுக்கான விசேட வட்டித் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு முன்மொழிகின்றோம். இத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட தனிப்பட்டவர்கள் ஒருமில்லியன் ரூபா வரையும் ஒருவருட நிலையான வைப்பிற்கு சந்தையில் காணப்படும் வட்டி வீதத்திற்குமேலதிகமாக 3 சதவீத் மேலதிக வட்டி வீதத்திற்கு தகுதி பெறுகின்றனர். சிரேட்ட பிரசைகளுக்கு 3 சதவீத மேலதிக மானிய வட்டியைப் பெற்றுக் கொடுத்து இத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ரூபா 15,000 மில்லியன் முன்மொழிகின்றேன். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 83)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • பாதிக்கப்பட்ட தனிநபர்கள்; பெண் தலைமைத்துவ குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான/நெருக்கமான துணை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தேவைகள் மற்றும் வருமான நிலைகளின் அடிப்படையில் நிதி உதவி.

    சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையை தடுத்தல், பெண்களை வலுவூட்டல் மற்றும், பெண்களை பாதுகாத்தல் போன்ற நிகழச்சித்திட்டங்களுக்கு ரூபா. 120 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் வியாபித்துள்ள வலையமைப்பினூடாக பெண்களை இலக்காக கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ரூபா. 720 மில்லியன் செலவு செய்யப்படும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 70)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • சட்ட உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன அல்லது பாதிக்கப்பட்ட தனிநபர்கள்; பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் மற்றும் தேவைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் பாலின அடிப்படையிலான/நெருக்கமான கூட்டாளி வன்முறையால் பாதிக்கப

    சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையை தடுத்தல், பெண்களை வலுவூட்டல் மற்றும், பெண்களை பாதுகாத்தல் போன்ற நிகழச்சித்திட்டங்களுக்கு ரூபா. 120 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் வியாபித்துள்ள வலையமைப்பினூடாக பெண்களை இலக்காக கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ரூபா. 720 மில்லியன் செலவு செய்யப்படும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 70)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் நிலைமைகளையுடைய சகல நபர்களதும் தகவல்களை உள்ளடக்கிய டிஜிட்டல் தரவுக் களஞ்சியம்

    முழுமையான நிகழ்ச்சித்திட்டமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. எனவே, 2025 ஆம் ஆண்டில் இந்நோக்கத்திற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்க நான் முன்மொழிகிறேன். ஆரம்பத்தில், ராகமையிலுள்ள எண்பியல் மற்றும் புனர்வாழ்வு வைத்தியசாலையில் உதவிச் சாதன உற்பத்தி வசதியினை தேசிய மையமாக விரிவுபடுத்தப்படுவதுடன், மேலும் தேவைக்கேற்ப பிராந்திய தயாரிப்பு நிலையங்களும் நிறுவப்படும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 82)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • தேவைப்பாடுடைய காலம்கடந்த நோய் நிலைமைகளையுடைய நபர்களுக்கு ஆகக் குறைந்தது மாதாந்தம் ரூபா 10,000 நிதியுதவி

    சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை ரூபா 7,500 லிருந்து ரூபா 10,000 ஆகவும், முதியோருக்கான மாதாந்திர கொடுப்பனவுகளை ரூபா 3,000 லிருந்து ரூபா 5,000 ஆகவும் 2025 ஏப்ரல் முதல் அதிகரிக்க நான் முன்மொழிகிறேன். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 79)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • குடும்ப சுகாதாரச் சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சமூக சுகாதாரச் சேவையூடாக மேலதிக போசாக்கு தேவைப்பாடுடைய கர்ப்பிணித் தாய்மார்களை அடயாளம் காணல்

    கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவினை கொடுப்பதற்காக மாதாந்த உதவித்தொகை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இதற்காக ரூபா 7,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா சத்துணவு  திட்டத்திற்காக ரூபா. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 70)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கு தமது கர்ப்ப காலத்திலும் பிள்ளைப் பேறின் பின்னரான ஒரு வருட காலப்பகுதிக்கு உணவுப் பொதிக்கான நிதியுதவி

    கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவினை கொடுப்பதற்காக மாதாந்த உதவித்தொகை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இதற்காக ரூபா 7,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா சத்துணவு  திட்டத்திற்காக ரூபா. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 70)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • விளிம்புநிலை மற்றும் அபாயநேர்வுக்குட்படக்கூடிய குழுக்கள் தொடர்பாக விசேட கவனத்தைச் செலுத்தி கல்வி, சுகாதாரம், சமூகச் சேவைகள் மற்றும் சிறுவர் நலனோம்புகையின் ஏனைய அத்தியாவசியமான துறைகள் உட்பட தீர்மானகரமான துறைகளுக்கான பாதீட்டு ஒதுக்கீடுகளை அதிகரித்தல்

    அதன்படி, பாடசாலைகளை தயாரிப்பதற்காக பாடசாலை இடமாற்ற ஒரு தேசிய திட்டத்தனை முறைமையை மீளாய்வு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி ரூபா 500 மில்லியனை இதற்காக ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறோம் (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 72) அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான அரசாங்க சுகாதார வரவு செலவுத் திட்டம் ரூ. 604,000 மில்லியனாக கணிசமாக அதிகரித்துள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 20) அதன்படி, அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு நிகர செலவினத்தை 2025 இல் ரூபா 232.5 பில்லியனாக உயர்த்தியுள்ளது. வறியவர்கள் மற்றும் மிக வறியவர்கள் (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 78)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்கல் உட்பட ஒட்டுமொத்த சிறுவர் சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சமூகம், குடும்பங்கள் மற்றும் பாடசாலைகளை மையமாகக் கொண்டஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத

    முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தில் மாணவர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்கப்படும் உணவுக்கான கட்டணத்தை ரூபா 60 இலிருந்து ரூபா 100 ஆக அதிகரிக்க நான் முன்மொழிகிறேன். மேலும் இதற்காக 2025 வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 72) விளையாட்டு பாடசாலை மாணவர்கள் போஷாக்கான உணவுகளை பெற்றுக் கொள்வதற்கு போஷாக்கு உணவு கொடுப்பனவானது ஆதரவளித்துள்ளது. மாதாந்த போஷாக்கு உணவு கொடுப்பனவினை, ரூபா 5,000 இலிருந்து ரூபா 10,000 வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இதற்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கமானது ஏற்கனவே வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 73)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • வலது குறைந்த ஆட்களுக்கான புத்தாக்கங்களை ஊக்குவித்தல்

    மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிச் சாதனங்கள் மிக முக்கியமானவை என்பதுடன், அவை மாற்றுத்திறனாளிகளது உடலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன. இச்சாதனங்களின் உள்ளூர் உற்பத்தி வசதிகளை வசதிகளை அனைத்து மாகாணங்களிலும் விரிவுபடுத்துவதற்கான முழுமையான நிகழ்ச்சித்திட்டமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. எனவே, 2025 ஆம் ஆண்டில் இந்நோக்கத்திற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்க நான் முன்மொழிகிறேன். ஆரம்பத்தில், ராகமையிலுள்ள எண்பியல் மற்றும் புனர்வாழ்வு வைத்தியசாலையில் உதவிச் சாதன உற்பத்தி வசதியினை தேசிய மையமாக விரிவுபடுத்தப்படுவதுடன், மேலும் தேவைக்கேற்ப பிராந்திய தயாரிப்பு நிலையங்களும் நிறுவப்படும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 82)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • 2023.10.15ஆந் திகதி கொண்டதாக தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட ஹற்றன் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் காணி, வீடமைப்பு. கல்வி

    பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பொது தனியார் கூட்டாண்மை (PPP) மூலம் தோட்ட மட்டத்திலான சுகாதார சேவையை வலுப்படுத்தும் செயன்முறையை நடவடிக்கைகள் விரைவுபடுத்துவதற்கு எடுக்கப்படும். தோட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவையான மனித வளங்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 70) அதன்படி, பின்வரும் முன்னெடுப்புக்களை ஆதரிக்க ரூபா 7,583 மில்லியன் ஒதுக்கீட்டினை நாம் முன்மொழிகிறாம் i. பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ரூபா 4,267 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ii. மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ரூபா 2,450 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. iii. மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ரூபா 866 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 88)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • மலையக தமிழ் சமுதாயத்தின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்று வகையில் அதிகரித்தல். மக்கள் கௌரவமான வருமானத்தினைப் பெறுவதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துதல்

    பெருந்தோட்டத் துறையினை நோக்காக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக அவர்களது நாளாந்த வேதனத்தை ரூபா 1,700 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் உறுதியளிக்கிறது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 95)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • விஞ்ஞான ரீதியாக ஒதுக்கப்பட்ட 25 அமைச்சுக்களுக்கு 25 அமைச்சர்களையும் 25 நேரொத்த பிரதியமைச்சர்களையும் நியமித்தலும் இராஜங்க அமைச்சர் பதவிகளை இல்லாதொழித்தலும்

    அரச தலைமைத்துவமானது செலவு முகாமைத்துவத்திற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுகின்றது என்பதை காட்டுவதற்கு உதாரணமாக அமைச்சரவையானது 24 அமைச்சுக்களுடன் 21 அமைச்சர்களினால் நிறுவகிக்கப்படுகின்றது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 68)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • அவசியப்பாட்டுக்கிணங்க புதிய நிறுவனங்களை உருவாக்குதலும் சமமான விடயப்பரப்புகள் மற்றும் செயற்பாடுகள் உள்ள நிறுவனங்களை முறைப்படி ஒருங்கிணைத்தலும் அனாவசியமான நிறுவனங்களை இல்லாதொழித்தலும்

    இதற்குப் பரிகாரமாக பல அரசாங்க நிறுவனங்களின் பணிகள் மற்றும் பயன்பாட்டை மீளாய்வதற்கு ஏற்கனவே குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எவ்வகையான நிறுவனங்கள் தொடர்ந்தும் இயங்க வேண்டும், எவை ஏனைய நிறுவனங்களுடன் ஒன்று சேர்க்கப்பட வேண்டும், எவை மூடப்படல் வேண்டும் என்பதை தீர்மாணிக்க முடியும். பொதுச் சேவைகளை வழங்குவதிலும் வரிசெலுத்துநர்களின் நிதிகளை சேமிப்பதிலும் மேம்பட்ட வினைத்திறனை இச்செயற்பாடு ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகின்றது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 69)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் செலவு குறைந்தபட்சம் மொத்த தேசிய உற்பத்தியில் 3% ஐ இலக்காகக்கொண்டு படிப்படியாக அதிகரித்தல்

    அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான அரசாங்க சுகாதார வரவு செலவுத் திட்டம் ரூ. 604,000 மில்லியனாக கணிசமாக அதிகரித்துள்ளது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 121)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • ஆட்களுக்காக வருடாந்த வரி விடுப்பு எல்லையை 12 இலட்சம் ரூபாவில் இருந்து 24 இலட்சம் ரூபா வரை அதிகரித்தலும் வரித் தொகுதிகளுக்கான (வுயஒ டீசயஉமநவள) வரிவீதங்களை (Tax Brackets) நியாயமானவகையில் திருத்தியமைத்தலும்

    2024 டிசம்பர் பாராளுமன்றத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏனைய வருமான வழிமுறைகள் தனியார் வருமான வரியின் வரிவிலக்கு அடிப்படை எல்லை உயர்த்தப்பட்டது, வருமான வரியின் இரண்டாவது மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் பசும்பால் மற்றும் யோகர்ட் மீதான பெறுமதிசேர் வரி அகற்றபட்டமை என்பவை ஆகும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 97)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • வற் (VAT) வரி சேகரிப்பினை ஒழுங்குறுத்தவதற்காகவும் வினைத்திறனுடையதாக்கவும் பொயின்ற ஒஃப் சேல்ஸ் (POS) கருவிகளையும் டிஜிட்டல் இன்வொயிஸ் முறைகளையும் அறிமுகஞ்செய்தல்

    பொருளதாரத்தை முறைப்படுத்துவதற்கும் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதற்கும் அதன் அகன்ற டிஜிட்டல் மயப்படுத்தல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இலங்கை காசற்ற பொருளாதாரத்தினை நோக்கி நகர்கிறது. வியாபாரங்களில் விசேடமாக பெறுமதிசேர்வரி பதிவு செய்துள்ள தொழில்முயற்சிகளில் காசில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கு மட்டும் டிஜிற்றல் பரிமாற்றத்திற்கு வசதியளிப்பதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக விற்பனை நிலைய இயந்திரங்கள் (POS) பயன்படுத்துதல். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 97)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • உள்நாட்டில் உற்பத்தி செய்கின்ற பால், முட்டைகளை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு, பாலகர் பால், ஒளடதங்கள், பாடசாலை நூல்கள் மற்றும் உபகரணங்கள், சஞ்சிகைகள், நூலக சேவைகள், விவசாய உபகரணங்கள், பசளை, சூரியக் கலங்களும் துணைச்சாதனங்குளம், புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி பிறப

    2024 டிசம்பர் பாராளுமன்றத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏனைய வருமான வழிமுறைகள் தனியார் வருமான வரியின் வரிவிலக்கு அடிப்படை எல்லை உயர்த்தப்பட்டது, வருமான வரியின் இரண்டாவது மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் பசும்பால் மற்றும் யோகர்ட் மீதான பெறுமதிசேர் வரி அகற்றபட்டமை என்பவை ஆகும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 97) வருமான இழப்பினை ஈடுசெய்வதற்காக டிஜிட்டல் சேவைகளின் மீதான பெறுமதிசேர் வரி விதிப்பு சேவைகள் ஏற்றுமதிகள் மீதான நிறுவன வருமான வரி விதிப்பு மற்றும் சிகரட்/ மதுபானம் மற்றும் பந்தயம் மீதான நிறுவன வரி அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 97)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • நியாயமானவகையில் சுங்க வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக நிலவுகின்ற சிக்கலான சுங்கவரி வீதங்களை எளிமையாக்குதல்

    வர்த்தக வசதி மற்றும் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதற்கு புதிய சுங்க கட்டளைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 62)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவொரது பொருளாதார அலுவல்களை இயல்புநிலைக்கு கொண்டுவருதலும் நிலுவைக் கடன்களுக்காக நிவாரணங்களை வழங்க பதிய நிவாரண வங்கியொன்றை தாபித்தலும்

    நிதிக்கான அணுகல் என்பது தொழில்முயற்சிகளும் நீண்டகாலமாக கிராமிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களும் எதிர்கொள்கின்ற பாரிய சவால்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்நாட்டின் நிதியியல் கலாசாரமானது பிணையுறுதி அடிப்படையிலமைந்த கடன்வழங்கலாக இருந்து வருகின்றது. இது ஓரங்கட்டப்படுதலுக்கு பாரிய நிதியியல் வழிவகுத்துள்ளது. வங்கிகள் வைப்பாளர்களின் நலன்களை பாதுகாப்பதுடன் அவற்றின் கடன்வழங்கல் நடைமுறைகளில் முன்மாதிரியினை உறுதிசெய்கின்ற அதேவேளை சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் புதிய தொழில்முயற்சியாளர்களுக்கும் தீர்வொன்று இருக்கின்ற தேவையும் காணப்படுகின்றது. (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 67)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

  • கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான மூலதனம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்ளும் நோக்கத்தில் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளைப் (FDI)) பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டுபங்குதாரர்களுடன் ஒன்றிணைந்துசெயற்படல்

    அதிக வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுடன் கூடிய நாடுகளுக்கு முன்னுரிமையளித்து, ஏற்கனவே காணப்படுகின்ற 44 இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களுக்கு அப்பால் இலங்கையின் இரட்டை வரி விதிப்பனவு மற்றும் வரி ஏய்ப்பு ஒப்பந்தங்கள் விரிவுபடுத்தப்படும் (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 62) இலங்கையின் கனிம வளங்கள் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தின் முதலீடு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதிகளில் இலங்கையின் பயன்படுத்தப்படாத திறனை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அரசாங்கம் அழைப்புவிடுக்கும். (2025 வரவு சிலவுத் திட்ட உரை, பக்கம் 64)

    more
    வரவு செலவு திட்டத்தில் உள்ளது

    17-Feb-25

Subscribe for Manthri.lk

Please submit your details to subscribe for Manthri.lk newsletter.