සිංහල தமிழ் English

அனுர மீட்டர் என்பது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு ஆன்லைன் டிராக்கராகும். கண்காணிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 22 வாக்குறுதிகள், பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதிக பொது நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. 08 ஜூலை 2025 நிலவரத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு. டிராக்கரை ஆதரிக்க [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது பேனரில் உள்ள "தகவலை பங்களிக்கவும்" பட்டன்னை கிளிக் செய்யவும்.

முன்னேற்ற நிலை Out of 22

10
3
8
1
  • உழைக்கும் போதே செலுத்தும் வரியை (PAYE) திருத்துதல்

    பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆளுகை

    2025 ஆம் ஆண்டின் 2 ம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டம், ஏப்ரல் 1, 2025 முதல் அமுலுக்கு வருகிறது, இது வரி வரம்புகளைத் திருத்துகிறது மற்றும் நீங்கள் உழைக்கும்போது செலுத்தும் (PAYE) வரி முறையில் வரி இல்லாத வரம்பை ரூ.100,000 இலிருந்து ரூ. 150,000 ஆக அதிகரிக்கிறது.
    மூலம்/கள்:
    1. https://documents.gov.lk/view/acts/2025/3/02-2025_E.pdf

    உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு ஏப்ரல் 30, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கை ஜூன் 11, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் முன்னேற்றம் குறித்த தகவல் இன்னும் பெறப்படவில்லை.

    more
    நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதற்கு மேற்பட்ட மாதாந்த நிதியுதவி வழங்கல்

    சமூகப் பாதுகாப்பு

    "2024 டிசம்பர் 2ஆம் திகதியிட்ட அமைச்சரவை முடிவின் அடிப்படையில், இரு வகை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்த சலுகை கொடுப்பனவை அதிகரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்களுக்கான உதவித்தொகைகள் முறையே ரூ.8,500 மற்றும் ரூ.15,000 இலிருந்து ரூ.10,000 மற்றும் ரூ.17,500 ஆக உயர்த்தப்பட்டன. 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில், ""அஸ்வெசும"" திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, 2024 இல் ரூ.205 பில்லியனில் இருந்து ரூ.232.5 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்டதை அடிப்படையாகக் கொண்டு, இந்த வாக்குறுதி 'பகுதியாக நிறைவேற்றப்பட்டது' எனக்கொள்ளப்படும்; முழுமையான அமுலாக்கத்தின் ஆதாரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
    மூலம்/ மூலங்கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=12909

    2. https://www.treasury.gov.lk/api/file/96100697-0492-4c66-b2a2-71aeafa23404
    3. https://www.treasury.gov.lk/api/file/57784431-d651-4f0f-bcca-5e4f940cd511 (Page 55)"

    கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு மார்ச் 11, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் முன்னேற்ற விபரம் இன்னும் பெறப்படவில்லை.

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • உதவி தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகையாக வழங்குதல்.

    சமூகப் பாதுகாப்பு

    மார்ச் 17, 2025 திகதியிட்ட அமைச்சரவை முடிவின் மூலம், அஸ்வெசும நலன்புரி சலுகைகள் செலுத்தும் திட்டம் திருத்தப்பட்டது. இந்த முடிவின் மூலம், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டது, மேலும் அரசாங்கம் இந்த முடிவை ஏப்ரல் 2025 முதல் அமுல்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், வாக்குறுதி செயல்படுத்தப்பட்டதற்கான மேலதிக ஆதாரங்கள் கிடைக்கும்வரை "ஓரளவு செயல்படுத்தப்பட்டதாக" கருதப்படுகிறது.
    மூலம்/கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13080

    கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கை மார்ச் 11, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் முன்னேற்றம் குறித்த விபரம் இன்னும் பெறப்படவில்லை.

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • தீரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்த நிதி மானியம்.

    சமூகப் பாதுகாப்பு

    மார்ச் 17, 2025 திகதியிட்ட அமைச்சரவை முடிவின் மூலம், அஸ்வெசும நலன்புரி சலுகைகள் கொடுப்பனவு திட்டம் திருத்தப்பட்டது. இந்த முடிவின் மூலம், அறியப்படாத காரணவியல் (CKDU) நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு ஏப்ரல் 2025 முதல் ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், வாக்குறுதி செயல்படுத்தப்பட்டதற்கான மேலதிக ஆதாரங்கள் கிடைக்கும்வரை "ஓரளவு செயல்படுத்தப்பட்டதாக" கருதப்படுகிறது.
    மூலம்/கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13081

    கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கை மார்ச் 11, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் முன்னேற்ற தகவல் இன்னும் பெறப்படவில்லை.

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்தல்

    சமூகப் பாதுகாப்பு

    ஜூன் 3, 2025 அன்று அரசாங்க அச்சகத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தேசிய குறைந்தபட்ச தொழிலாளர் ஊதிய (திருத்த) சட்டமூலத்தின்படி, எந்தவொரு தொழில் அல்லது சேவையிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 27,000 ஆகவும் (பட்ஜெட் நிவாரணக் கொடுப்பனவு உட்பட), ஒரு தொழிலாளியின் தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 1,080 ஆகவும் இருக்கும். முன்பு, குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 17,500 ஆகவும், குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ. 700 ஆகவும் இருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, ஏப்ரல் 2025 நிலவரப்படி தேசிய வறுமைக் கோடு ரூ. 6,342 ஆக இருந்தது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை "ஓரளவு நிறைவேற்றப்பட்டதாக" கருதப்படுகிறது.
    மூலம்/கள்:
    1. https://documents.gov.lk/view/bills/2025/6/604-2025_E.pdf

    2. https://www.statistics.gov.lk/povertyLine/2021_Rebase#gsc.tab=1

    பிப்ரவரி 28, 2025 அன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டதகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, ஏப்ரல் 7, 2025 அன்று தொழில் அமைச்சுக்கு பொறுப்பு திருப்பி விடப்பட்டது. அடுத்த சுற்றில் தொழில் அமைச்சுக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • தர்க்கரீதியாக தீர்மானிக்கப்பட்ட 25 அமைச்சகங்களுக்கு 25 அமைச்சர்களையும் தொடர்புடைய பிரதி அமைச்சர்களையும் நியமித்தல் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை இல்லாதொழித்தல்

    ஆளுகை

    "தற்போதைய 24 அமைச்சுகளுக்கு, 22 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் (ஜனாதிபதி உட்பட) மற்றும் 28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து அமைச்சுகளில் தலா இரண்டு பிரதி அமைச்சர்கள் உள்ளனர். எந்த இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவில்லை.
    மூலம்/கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=25&Itemid=23&lang=en

    2. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=26&Itemid=24&lang=en

    பிப்ரவரி 28, 2025 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கை மார்ச் 6, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் முன்னேற்ற விபரம் இன்னும் பெறப்படவில்லை.

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் ரூ.10,000 நிதி உதவி வழங்குதல்.

    சமூகப் பாதுகாப்பு

    மார்ச் 17, 2025 திகதியிட்ட அமைச்சரவை முடிவின் மூலம், அஸ்வெசும நலன்புரி சலுகைகள் செலுத்தும் திட்டம் திருத்தப்பட்டது. இந்த முடிவின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், வாக்குறுதி செயல்படுத்தப்பட்டதற்கான மேலதிக ஆதாரங்கள் கிடைக்கும்வரை "ஓரளவு செயல்படுத்தப்பட்டதாக" கருதப்படுகிறது.
    மூலம்/கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13080

    கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கை மார்ச் 11, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் முன்னேற்ற விபரம் இன்னும் பெறப்படவில்லை.

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மக்கள் ஆட்சியில் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், ஒரு வருடத்திற்குள் நடத்தப்படும்.

    ஆளுகை

    நாட்டில் உள்ள 341 உள்ளாட்சி அமைப்புகளில் 28 மாநகர சபைகளும், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 339 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
    மூலம்/கள்:
    1. https://results.elections.gov.lk/

    பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையில் முன்னேற்றம் குறித்த தகவல் அல்லது தகவல் அறியும் உரிமை கோரிக்கை கிடைத்த தகவல் பெறப்படவில்லை.

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, SOE-களின் செயல்பாடுகள் குறித்த விரிவான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்குதல்.

    ஆளுகை

    நிதியமைச்சால் நிர்வகிக்கப்படும் கண்காணிப்புக் குழுவின்படி, 20 ஜூன் 2025 நிலவரப்படி, 52 முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில்(SOE), 8 நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அல்லது நிதி அறிக்கைகளை வெளியிடவில்லை. கண்காணிப்புக் குழுவில் கிடைக்கும் 22 SOE அறிக்கைகள் கணக்காய்வு செய்யப்படவில்லை. மேற்கூறியவற்றின் அடிப்படையில், வாக்குறுதி "பகுதியளவு நிறைவேற்றப்பட்டதாக" கருதப்படுகிறது.
    மூலம்/கள்:
    1. https://www.treasury.gov.lk/web/annual-reports-financial-statements-of-key-soes

    பிப்ரவரி 28, 2025 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, ஏப்ரல் 28, 2025 அன்று இலங்கை மத்திய வங்கிக்கு பொறுப்பு திருப்பி விடப்பட்டு பதிலளிக்கப்பட்டது. அடுத்த சுற்றில் இலங்கை மத்திய வங்கிக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    பகுதியளவு நிறைவேற்றப்பட்டது

    08-Jul-25

  • கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் 2024 ஆம் ஆண்டு 09 ம் இலக்க இணைய பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துதல்.

    ஆளுகை

    மே 25, 2025 திகதியிட்ட அமைச்சரவை முடிவின் மூலம், மேற்படி சட்ட்டமூலத்தை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க, அனைத்து தொடர்புடைய துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. மே 8, 2025 அன்று அரச அச்சகத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணையப் பாதுகாப்பு (ரத்து செய்தல்) சடடன்மூலம், அரசாங்கத்தால் அல்ல, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டது.
    மூலம்/கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13192
    2. https://documents.gov.lk/view/bills/2025/5/590-2025_E.pdf

    பிப்ரவரி 28, 2025 அன்று சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, ஏப்ரல் 10, 2025 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பொறுப்பு திருப்பி விடப்பட்டது. அடுத்த சுற்றில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    தொடங்கப்பட்டது

    08-Jul-25

  • பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்தல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதி செய்தல்.

    ஆளுகை

    பயங்கரவாத தடுப்புச் சட்டதின்கீழ் பல கைது நடவடிக்கைகள் நிகழ்ந்த போதிலும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு ஆணைக்குழுவை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதால், இந்த வாக்குறுதி "தொடங்கப்பட்டதாக" கருதப்படுகிறது. சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, கூறப்பட்ட மூலத்தை மேம்படுத்த பொருத்தமான திட்டங்களை சமர்ப்பிக்க இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
    மூலம்/கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13046

    பிப்ரவரி 28, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, மார்ச் 21, 2025 அன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பொறுப்பு திருப்பி விடப்பட்டது. அடுத்த சுற்றில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    தொடங்கப்பட்டது

    08-Jul-25

  • நிரந்தர வீடுகள் கட்ட மலையக சமூகங்களுக்கு நிலங்களை ஒதுக்குவது.

    சமூகப் பாதுகாப்பு

    செப்டம்பர் 2024 க்குப் பின்னர் காலத்தைக் குறிப்பிட்டு, பிப்ரவரி 28, 2025 அன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட RTI கோரிக்கைக்கு, ஏப்ரல் 07, 2025 அன்று பின்வரும் பதில் கிடைத்தது: "அமைச்சால் கட்டப்பட்ட 725 வீடுகளின் பயனாளிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன

    more
    தொடங்கப்பட்டது

    08-Jul-25

  • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து அவர்களின் சுதந்திரமான சமூகமயமாக்கலை உறுதி செய்தல்.

    சட்டமும் ஒழுங்கும்

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    நீதி மற்றும் தேசிய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, மார்ச் 21, 2025 அன்று பொறுப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு திருப்பி விடப்பட்டது. அடுத்த சுற்றில் ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, பாராளுமன்றத்தால் நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாத ஜனாதிபதியை நியமித்தல்.

    ஆளுகை

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு மார்ச் 21, 2025 அன்று பின்வரும் பதில் கிடைத்தது: "இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை."

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்து குடிமக்களின் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல். இந்த முயற்சி 2015 இல் தொடங்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை. முன

    ஆளுகை

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு மார்ச் 21, 2025 அன்று பின்வரும் பதில் கிடைத்தது: "இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை."

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த காலங்களில் நடந்த அரசியல் படுகொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து விசாரித்து நீதி வழங்குதல்.

    சட்டமும் ஒழுங்கும்

    செம்மணிப் மனிதப் புதைகுழிப் பகுதியில் சமீபத்தில் அகழ்வு நடத்தப்பட்ட போதிலும், அரசாங்க முடிவால் நடவடிக்கை தொடங்கப்படாததால், ஒட்டுமொத்த வாக்குறுதியும் 'புதுப்பிப்பு இல்லை' என்று குறிக்கப்படுகிறது.

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, மார்ச் 21, 2025 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு (இலங்கை காவல்துறை) மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொறுப்பு திருப்பி விடப்பட்டது. அடுத்த சுற்றில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • 2019-04-21 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுத்தல்.

    சட்டமும் ஒழுங்கும்

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, மார்ச் 21, 2025 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு (இலங்கை காவல்துறை) மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பொறுப்பு திருப்பி விடப்பட்டது. அடுத்த சுற்றில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • இனவாதம் மற்றும் மத தீவிரவாதத்தால் ஏற்படும் வன்முறைச் செயல்களை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைகுழுவின் பணிகளை விரிவுபடுத்துதல்.

    சமூகப் பாதுகாப்பு

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு, மார்ச் 21, 2025 அன்று வெளிவிவகார அமைச்சுக்கு பொறுப்பு திருப்பி விடப்பட்டது. அடுத்த சுற்றில் வெளிவிவகார அமைச்சுக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • கடன் நிலைத்தன்மையைப் பராமரிக்கும் நோக்கத்துடன், தேவையெனில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடரவும், தட்டுப்பாடின்றி வட்டி செலுத்தக்கூடியதொரு நிலையை உறுதி செய்யவும் மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

    பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆளுகை

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    நிதியமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையைத் தொடர்ந்து மார்ச் 14, 2025 அன்று ஒரு புதிய கோரிக்கை அனுப்பப்பட்டது, அது ஏப்ரல் 17, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் இன்னும் பதில் கிடைக்கவில்லை.

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • முன்னைய அரசுகளால் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு கடன்களைப் பற்றிய விரிவான கடன் தணிக்கையை மேற்கொண்டு, பொது நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனால் கடன்களை தவறாக பயன்படுத்தியவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை

    பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆளுகை

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கை மார்ச் 28, 2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் ஏப்ரல் 28, 2025 அன்று ஒரு பதில் பெறப்பட்டது: "... குறிப்பிடப்பட்ட விடயம் பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் வரம்பிற்குள் வராது." அடுத்த சுற்றில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு ஒரு தகவல் அறியும் உரிமை கோரிக்கை அனுப்பப்படும்.

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வணிக நடவடிக்கைகள் அல்லது ஒப்பந்தங்களில் ஈடுபடுவதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தடுப்பதை உறுதிசெய்தல்

    ஊழல் எதிர்ப்பு

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கையில் முன்னேற்ற தகவல் அல்லது கோரிக்கையை ஏற்றுக்கொண்டமை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

  • திருடப்பட்ட அரசுச் சொத்துகளை மீட்டெடுக்க, திருடப்பட்ட சொத்து மீட்பு நிறுவனமான (STAR) மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் அலுவலகம் (UNODC) போன்றசர்வதேச அமைப்புகளின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை ஆதரவுடன் திருடப்பட்ட பொது சொத்து மீட்பு நிறுவ

    ஊழல் எதிர்ப்பு

    அதிகாரப்பூர்வ முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.

    நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு பிப்ரவரி 28, 2025 அன்று அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு மார்ச் 21, 2025 அன்று பின்வரும் பதில் கிடைத்தது: "குற்றவியல் சட்டத்தின் நடவடிக்கைகள் சடடன்மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது."

    more
    புதுப்பிப்பு இல்லை

    08-Jul-25

Subscribe for Manthri.lk

Please submit your details to subscribe for Manthri.lk newsletter.