සිංහල தமிழ் English

அனுர மீட்டர் என்பது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு ஆன்லைன் டிராக்கராகும். கண்காணிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 வாக்குறுதிகள், பொருளாதார சீர்திருத்தங்கள், ஆளுகை, ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதிக பொது நலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. 11 நவம்பர் 2025 நிலவரத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு. டிராக்கரை ஆதரிக்க [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது பேனரில் உள்ள "தகவலை பங்களிக்கவும்" பட்டன்னை கிளிக் செய்யவும்.

30ம் முன்னேற்ற நிலமை

10
10
9
1
  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 10,000 நிதியுதவி வழங்கல்

    சமூகப் பாதுகாப்பு

    இந்த வாக்குறுதியானது, தோட்ட வீடமைப்புத் திட்டங்களை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளாக விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதற்கு மேற்பட்ட மாதாந்த நிதியுதவி வழங்கல்
    முன்னேற்ற விபரங்கள்

    முந்தைய நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட 'அஸ்வெசும' திட்டம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான குறைந்தபட்ச மாதாந்தம் நிதியுதவியை ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தி, NPP அரசாங்கத்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

    2025 மார்ச் 24 ஆம் தேதியிட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2025 ஏப்ரல் 9 ஆம் தேதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள், மானியத் தொகைகளை பின்வருமாறு திருத்தியுள்ளன:
    A. வறியவர்கள் பயனாளிகள்: மாதத்திற்கு ரூ. 10,000 (ரூ. 8,500 இலிருந்து உயர்த்தப்பட்டது)
    B. மிகவும் வறியவர்கள் பயனாளிகள்: மாதத்திற்கு ரூ. 17,500 (ரூ. 15,000 இலிருந்து உயர்த்தப்பட்டது. )

    திட்டம் A மற்றும் B ஆனது ஜனவரி 2025 முதல் ஜூன் 2027 வரை செயல்படும். 2025 செப்டம்பர் 12 ஆம் தேதி முதல், பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு நிதியுதவிகளைப் பெறுகின்றனர், மேலும் 1,412,574 குடும்பங்கள் இந்த நிதியுதவியைப் பெறுகின்றன. நவம்பர் மாத கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான பண மானியமாக ரூ. 151.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 159.3 பில்லியனைத் தொடர்வதாகும்.

    மூலம்/மூலங்கள்:
    1. https://wbb.gov.lk/backend/assets/publications/web/procurement_notices/TOR_SS_Risk_Asmt.pdf
    2. https://documents.gov.lk/view/extra-gazettes/2022/10/2302-23_T.pdf
    3. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=12909
    4. https://parliament.lk/uploads/documents/hansard/1738229262040729.pdf
    5. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/3/2429-02_T.pdf
    6. https://parliament.lk/uploads/documents/hansard/1747807095041246.pdf
    7. https://wbb.gov.lk/
    8. https://hirunews.lk/en/430303/aswesuma-payments-to-be-disbursed-tomorrow
    9. https://www.treasury.gov.lk/api/file/7e37cd1c-77ed-4c90-b55e-77ad12f277c8
    10. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/12/2467-03_T.pdf

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரி விலக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை நீக்குதல்

    ஆளுகை

    சலுகை அனுமதிப் பத்திரங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதையும், சுங்கத் துறை வெளியீட்டையும் அரசாங்கம் இடைநிறுத்தியது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வரி விலக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை நீக்குதல்.
    முன்னேற்ற விபரங்கள்

    சலுகை அனுமதிப் பத்திரங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதையும், சுங்கத் துறை வெளியீட்டையும் அரசாங்கம் இடைநிறுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன; இருப்பினும், எந்தவொரு உத்தியோகபூர்வ அரசாங்க ஆவணங்களும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

    2025 ஜனவரி 31 ஆம் திகதியிட்ட நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட பத்திரிகை வெளியீடு, சலுகை மோட்டார் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களின் கீழ் எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கும், சுங்கத் துறை வெளியீட்டிற்கும் இனிமேல் அனுமதிக்கப்படாது என்று அறிவித்தது.

    2025 பெப்ரவரி 17 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டுக்கான வாகன அனுமதிப்பத்திரங்களோ அல்லது வாகனங்களோ வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்தார். இருப்பினும், வரவு செலவுத் திட்ட உரையின் உத்தியோகபூர்வ எழுத்து வடிவத்தில், அதிக இயக்க மற்றும் பராமரிப்புச் செலவுகளுடன் கூடிய ஆடம்பர வாகனங்களை ஏலத்தில் விடுவது பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டது பற்றி அதில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது இடைநிறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியதாக ஊடகச் செய்திகள் மேற்கோள் காட்டின. இருப்பினும், இன்றுவரை, இந்தக் கூற்றுக்களை நிரூபிக்க எந்தவொரு உத்தியோகபூர்வ அரசாங்க ஆவணங்களும் வெளியிடப்படவில்லை.

    2025 நவம்பர் 7 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி பின்வருமாறு தெரிவித்தார்: "அரசாங்கத்தின் தற்போதைய வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் தொகுதியானது போதுமானதாக இல்லை. அத்துடன், தற்போதுள்ள வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியானது பழமையானதாக உள்ளதால், அவற்றின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக அதிக செலவினங்கள் ஏற்படுகின்றன. இந்தச் சூழ்நிலையானது, அரசாங்கம் அடைய எதிர்பார்க்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் தொடர்ச்சிக்கு ஒரு முக்கியமான தடையாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க நிறுவனங்களுக்கு அத்தியாவசியமான பல வாகனங்கள் மற்றும் இயந்திரங்களையும், அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகு திருப்பியளிக்கும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்களையும் கொள்முதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக, முதன்மைத் தேவையாக மொத்தமாக ரூ. 12,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பிரேரிக்கப்படுகிறது."

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.treasury.gov.lk/api/file/be95c846-5f8e-4d45-81cc-e64580778621
    2. https://www.treasury.gov.lk/api/file/96100697-0492-4c66-b2a2-71aeafa23404
    3. https://www.ft.lk/front-page/Govt-rules-out-vehicle-permits-for-MPs/44-772708
    4. https://www.onlanka.com/news/sri-lanka-to-scrap-mps-pensions-suspend-vehicle-permits.html
    5. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    ஒரு வருடத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துதல்

    ஆளுகை

    நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக, 2025 மே 6 ஆம் தேதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மக்கள் ஆட்சியில் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், ஒரு வருடத்திற்குள் நடத்தப்படும்
    முன்னேற்ற விபரங்கள்

    நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக, 2025 மே 6 ஆம் தேதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    தேர்தல்கள் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் ஆகியவை அடங்கும். கல்முனை மாநகர சபையில் நடந்து கொண்டிருக்கிற சட்ட நடவடிக்கைகளால் அங்கும், எல்பிட்டிய பிரதேச சபையில் 2024 ஒக்டோபர் 26 ஆம் தேதி தேர்தல் ஏற்கெனவே நடத்தப்பட்டதாலும், அங்கும் தேர்தல் நடைபெறவில்லை.

    மூலம்/மூலங்கள்:
    1. https://results.elections.gov.lk/

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    SOE-களின் செயற்பாடுகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குதல்

    ஆளுகை

    இந்த வாக்குறுதியானது, 52 பிரதான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOE) நிதி அறிக்கைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதன் மூலம் நிறைவேற்றப்பட்டதாக விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, SOE-களின் செயல்பாடுகள் குறித்த விரிவான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்குதல்
    முன்னேற்ற விபரங்கள்

    இந்த வாக்குறுதியானது, 52 பிரதான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOE) நிதி அறிக்கைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதன் மூலம் நிறைவேற்றப்பட்டதாக விளக்கப்படுகிறது.

    தற்போதைய நிர்வாகத்திற்கு முன்: 2024 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதன் பின்னரே அவை வெளியிடப்பட்டன.

    2023 ஆம் ஆண்டிற்கான நிலை: அனைத்து 52 பிரதான SOE-களின் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. ஐந்து அறிக்கைகள் மட்டுமே கணக்காய்வுக்கு உட்படாமல் உள்ளன.

    2024 ஆம் ஆண்டிற்கான நிலை:அனைத்து 52 பிரதான SOE அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில், 14 அறிக்கைகள் தற்போது கணக்காய்வு செய்யப்படவில்லை.

    2025 நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகத் தனது பதவியில் இருந்து கொண்டு, பின்வருமாறு கூறினார்: "நாங்கள் அரச தொழில்முயற்சிகளை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் அரச தொழில் முயற்சிகளின் நோக்கங்களைத் தெளிவாக அடையளாம் காணலாம். அரச தொழில் முயற்சிகளுக்காக “புதிய அரச தொழில் முயற்சிச் சட்டம்” என்ற சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், 2026 ஆம் வருடத்தின் ஆரம்பப் பகுதியில் இச்சட்டம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது".

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.treasury.gov.lk/web/annual-reports-financial-statements-of-key-soes
    2. https://web.archive.org/web/20241008025343/https:/www.treasury.gov.lk/web/annual-reports-financial-statements-of-key-soes
    3. https://www.treasury.gov.lk/api/file/0cbd85ce-0f8c-4a10-af3f-03bd0ae59e99

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் ரூ. 10,000 நிதியுதவி வழங்குதல்

    சமூகப் பாதுகாப்பு

    குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் ரூ. 10,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் ரூ.10,000 நிதி உதவி வழங்குதல்
    முன்னேற்ற விபரங்கள்

    குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் ரூ. 10,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

    அஸ்வெசும நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுத் திட்டத்தில் உயர்வுகள் மற்றும் மாற்றங்களுக்காக, 2025 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி (இல.2429/02)க்கு 2025 ஏப்ரல் 9 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் கீழ், திட்டமிடப்பட்ட 310,000 பயனாளிகள், மாதாந்த நிதியுதவியாக ரூ. 10,000 பெற திட்டமிடப்பட்டுள்ளது. இது முந்தைய ரூ. 7,500 இலிருந்து உயர்த்தப்பட்ட தொகையாகும். இந்தத் திட்டம் ஏப்ரல் 2025 முதல் டிசம்பர் 2026 வரையிலான காலப்பகுதியில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் மாத கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    2025 நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக தனது பதவியில் இருந்து கொண்டு, அதன் அமுலாக்கத்தை உறுதிப்படுத்தி, "அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக சுமார் 140,000 மாற்றுத் திறன்கொண்டவர்களுக்கு ரூபா 10,000 சதவீதப்படி உதவித்தொகை வழங்குவதற்காக ரூபா 19,000 மில்லியன் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது." என்று கூறினார். மேலும், ஜனாதிபதி இரண்டு மேலதிக சமூக நலன்புரித் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்: ஒன்று குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு மாற்றுத்திறன் கொண்ட குழந்தையும் பாடசாலைக்குச் செல்வதற்காக மாதந்தோறும் ரூ. 5,000 வழங்குவது; மற்றொன்று உயர்கல்வியைத் தொடரும் அவர்களுக்கு ஆதரவளிப்பது.

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பண மானியமாக ரூ. 19 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 28.4 பில்லியனைத் தொடர்வதாகும்.

    மூலம்/மூலங்கள்:
    1. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/3/2429-02_T.pdf
    2. https://parliament.lk/uploads/documents/hansard/1747807095041246.pdf
    3. https://documents1.worldbank.org/curated/en/099042525132039006/pdf/P178973-92547558-717e-48f9-9dc7-92f7a9daf0c3.pdf
    4. https://nspd.gov.lk/index.php/services/25-services-english/117-rs-5000-monthly-living-assistance-for-disabled-persons-2
    5. https://www.treasury.gov.lk/api/file/0cbd85ce-0f8c-4a10-af3f-03bd0ae59e99
    6. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026
    7. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/12/2467-03_T.pdf

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    தேவையின் அடிப்படையில் தீரா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் ரூ. 10,000 நிதியுதவி வழங்குதல்

    சமூகப் பாதுகாப்பு

    சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    தீரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்த நிதி மானியம்
    முன்னேற்ற விபரங்கள்

    சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு ரூ. 7,500 இலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டது.

    அஸ்வெசும நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுத் திட்டத்தில் உயர்வுகள் மற்றும் மாற்றங்களுக்காக, 2025 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி (இல.2429/02)க்கு 2025 ஏப்ரல் 9 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அதிவிசேட வர்த்தமானி, இலக்கு வைக்கப்பட்ட அறியப்படாத காரணவியல் சிறுநீரக நோய் (CKDU) நோயாளிகளுக்கான நிதியுதவிக் கொடுப்பனவை இந்த அதிவிசேட வர்த்தமானி அதிகரிக்கின்றது. அங்கீகரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் கீழ், திட்டமிடப்பட்ட 50,000 பயனாளிகள் மாதாந்த நிதியுதவியாக ரூ. 10,000 பெற திட்டமிடப்பட்டுள்ளது; இது முந்தைய ரூ. 7,500 இலிருந்து உயர்த்தப்பட்ட தொகையாகும். இந்த திட்டம் ஏப்ரல் 2025 முதல் டிசம்பர் 2026 வரையிலான காலப்பகுதியில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம், இந்த அமுலாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன், 39,169 பயனாளிகள் தற்போது இந்தச் சலுகையைப் பெறுகின்றனர். நவம்பர் மாத கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கான பண மானியமாக ரூ. 6.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 4.5 பில்லியனைத் தொடர்வதாகும்.

    மூலம்/மூலங்கள்:
    1. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/3/2429-02_T.pdf
    2. https://parliament.lk/uploads/documents/hansard/1747807095041246.pdf
    3. https://documents1.worldbank.org/curated/en/099042525132039006/pdf/P178973-92547558-717e-48f9-9dc7-92f7a9daf0c3.pdf
    4. https://nspd.gov.lk/index.php/services/25-services-english/16-rs-5000-monthly-living-assistance-for-kidney-patients
    5. https://srilankamirror.com/news/october-aswesuma-payments-to-be-credited-today/
    6. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026
    7. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/12/2467-03_T.pdf

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    உதவி தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 வழங்குதல்

    சமூகப் பாதுகாப்பு

    மூத்த குடிமக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    உதவி தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு மாதாந்தம் ரூ.5,000 உதவித்தொகையாக வழங்குதல்.
    முன்னேற்ற விபரங்கள்

    மூத்த குடிமக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டது.

    அஸ்வெசும நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுத் திட்டத்தில் உயர்வுகள் மற்றும் மாற்றங்களுக்காக, 2025 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி (இல.2429/02)க்கு 2025 ஏப்ரல் 9 அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
    தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கான நிதியுதவியை இந்த அதிவிசேட வர்த்தமானி ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்துகிறது. அஸ்வெசும பதிவேட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்களே தகுதியுள்ள பயனாளிகள் ஆவர். உயர்த்தப்பட்ட கொடுப்பனவுகள் ஏப்ரல் 2025 முதல் டிசம்பர் 2026 வரையிலான காலப்பகுதியில் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    2025 செப்டம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி, நலன்புரி நன்மைகள் சபை தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கு முறையாக அறிவித்துள்ளது. ரூ. 5,000 கொடுப்பனவு அவர்களின் அஸ்வெசுமாவுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்யப்படுகிறது. நவம்பர் மாத கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோருக்கான பண மானியமாக ரூ. 54.2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 37.4 பில்லியனை விட அதிகமாகும். 100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்காக 2025 இல் ஒதுக்கப்பட்ட ரூ. 30 மில்லியன் தனி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=13080
    2. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/3/2429-02_T.pdf
    3. https://parliament.lk/uploads/documents/hansard/1747807095041246.pdf
    4. https://wbb.gov.lk/
    5. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026
    6. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/12/2467-03_T.pdf

  • நிறைவேற்றப் பட்டது

    * மாற்றங்களுடன் நிறைவேற்றப்பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    அரசாங்கத்தில் 25 அமைச்சரவை அமைச்சர்களும், மொத்தமாக 50 அமைச்சர்களும் மட்டுமே இருப்பர்

    ஆளுகை

    இந்த வாக்குறுதியானது, அரசியலமைப்பால் கட்டளையிடப்பட்ட வரம்புக்குள் அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கையை வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளாக விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    தர்க்கரீதியாக தீர்மானிக்கப்பட்ட 25 அமைச்சகங்களுக்கு 25 அமைச்சர்களையும் தொடர்புடைய பிரதி அமைச்சர்களையும் நியமித்தல் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை இல்லாதொழித்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    இந்த வாக்குறுதியானது, அரசியலமைப்பால் கட்டளையிடப்பட்ட வரம்புக்குள் அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கையை வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளாக விளக்கப்படுகிறது.

    அரசியலமைப்பின் 47 வது பிரிவின் கீழ், அமைச்சரவை அமைச்சர்கள் எண்ணிக்கை 30 ஆகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் எண்ணிக்கை 40 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளனர்; மொத்தமாக அதிகபட்சம் 70 ஆக இருக்கலாம்.

    நவம்பர் 2024 தேர்தலைத் தொடர்ந்து, 22 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். 2025 ஒக்டோபர் 10 அன்று மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மூலம் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. இது வாக்குறுதி அளிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பான 25-க்குள் உள்ளது. அதே நேரத்தில், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து, மொத்த எண்ணிக்கை 55 ஆக உள்ளது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.parliament.lk/uploads/acts/gbills/tamil/6176.pdf
    2. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=12&Itemid=18&lang=ta
    3. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=26&Itemid=24&lang=ta

  • நிறைவேற்றப் பட்டது

    * மாற்றங்களுடன் நிறைவேற்றப்பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புக்களுக்கு, சாதாரண விகிதங்களை விட குறைந்தபட்சம் 5% அதிக வட்டி வீதத்தை நிறுவுதல்

    பொருளாதார சீர்திருத்தம்

    60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 12 மாத காலப்பகுதியில் ரூ. 1 மில்லியன் வரையான நிலையான வைப்புகளுக்கு, மேலதிகமாக 3% வட்டி வீதத்தைப் பெறுகின்றனர்......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    மூத்த குடிமக்களின் நிலையான வைப்புகளுக்கு, சாதாரண வங்கி வட்டி விகிதங்களை விட 5% அதிகமான வட்டி வீதம்.
    முன்னேற்ற விபரங்கள்

    60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 12 மாத காலப்பகுதியில் ரூ. 1 மில்லியன் வரையான நிலையான வைப்புகளுக்கு, மேலதிகமாக 3% வட்டி வீதத்தைப் பெறுகின்றனர். இது 2025 டிசம்பர் 31 வரை மட்டுமே கிடைக்கும் வகையில் உள்ளது.

    2025 ஜூன் 16 ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானம், மூத்த குடிமக்களுக்கான விசேட வட்டித் திட்டம் 2025 ஐ அறிமுகப்படுத்தியது. இது 2025 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ளது. இத்திட்டமானது, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இலங்கைப் பிரஜைகளுக்கு, ரூ. 1 மில்லியன் வரையிலான உச்சவரம்புடன், 12 மாத காலப்பகுதியில் வைப்பிலிடப்படும் நிலையான வைப்புகளுக்கு மேலதிகமாக 3% வருடாந்த வட்டியை வழங்குகிறது.

    இப்பயனைப் பெறுவதற்கு, மாதாந்த வருமானம் ரூ. 150,000 இற்குக் குறைவாக இருப்பதற்கான ஆதாரம் மற்றும் வைப்பிலிடப்பட்ட நிதி தனிப்பட்ட சேமிப்பு என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும். சாதாரண மூத்த குடிமக்களின் நிலையான வைப்புகளுடன் ஒப்பிடுகையில், விசேட நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிக வட்டி வீதங்களின் மூலம் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதைக் அவதானிக்கலாம். பின்வரும் வங்கிகள் மட்டத்திலான தரவுகள் இந்த வித்தியாசத்தை விளக்குகின்றன:

    இலங்கை வங்கி:
    • விசேட திட்டம்: 11.46% மாதாந்தம் | 12.08% வருடாந்தம்
    • சாதாரண நிலையான வைப்பு: 7.00% மாதாந்தம் | 7.25% முதிர்ச்சியின் போது

    மக்கள் வங்கி:
    • விசேட திட்டம்: 11.46% மாதாந்தம்
    • சாதாரண நிலையான வைப்பு: 6.50% மாதாந்தம் | 6.75% முதிர்ச்சியின் போது

    செலான் வங்கி:
    • விசேட திட்டம்: 11.46% மாதாந்தம் | 12.08% வருடாந்தம்
    • சாதாரண நிலையான வைப்பு: 6.50% மாதாந்தம் | 7.00% முதிர்ச்சியின் போது

    ஹட்டன் நஷனல் வங்கி:
    • விசேட திட்டம்: 11.46% மாதாந்தம்
    • சாதாரண நிலையான வைப்பு: 7.00% மாதாந்தம் | 7.25% முதிர்ச்சியின் போது

    கொமர்ஷல் வங்கி:
    • விசேட திட்டம்: 11.46% மாதாந்தம்
    • சாதாரண நிலையான வைப்பு: 7.25% மாதாந்தம் | 7.50% முதிர்ச்சியின் போது

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், மூத்த குடிமக்களுக்கான விசேட வட்டித் திட்டத்திற்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 25 பில்லியனுடன் முரண்படுகிறது.

    மூலம்/மூலங்கள்:
    1.https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=13249
    2. https://www.news.lk/current-affairs/implementation-of-the-special-interest-scheme-for-senior-citizens
    3. https://www.boc.lk/rates-tariff#rupee-deposit-rates
    4. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026

  • நிறைவேற்றப் பட்டது

    * மாற்றங்களுடன் நிறைவேற்றப்பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    வருடாந்த வருமான வரி அறவீட்டு வரம்பை ரூ. 2.4 மில்லியனாக உயர்த்துதல்

    பொருளாதார சீர்திருத்தம்

    உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டம் இல. 02/2025, 2025 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதன் மூலம், ஆண்டுக்கான வரி இல்லாத வரம்பு ரூ. 1.2 மில்லியனில் இருந்து ரூ. 1.8 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    உழைக்கும் போதே செலுத்தும் வரியை (PAYE) திருத்துதல் மற்றும் தனிநபர் வருமான வரிக்கான வருடாந்த வரி அறவீட்டு வரம்பை ரூ. 1.2 மில்லியனிலிருந்து ரூ. 2.4 மில்லியனாக உயர்த்துதல், அத்துடன் வரி வீதங்கள் மற்றும் வரி அலகுகளை நியாயமான அடிப்படையில் திருத்துதல்.
    முன்னேற்ற விபரங்கள்

    உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டம் இல. 02/2025, 2025 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதன் மூலம், ஆண்டுக்கான வரி இல்லாத வரம்பு ரூ. 1.2 மில்லியனில் இருந்து ரூ. 1.8 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட திருத்தம், மாதாந்த வரி இல்லாத வரம்பை ரூ. 100,000 இலிருந்து ரூ. 150,000 ஆக அதிகரித்துள்ளது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://documents.gov.lk/view/acts/2025/3/02-2025_T.pdf

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்தல்

    சமூகப் பாதுகாப்பு

    தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் வேதனத்தை ஜனவரி 2026 முதல் ரூ. 1,350 இலிருந்து ரூ......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் வேதனத்தை ஜனவரி 2026 முதல் ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,550 ஆக உயர்த்தப் படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.அத்துடன், அரசாங்கத்தின் ஊடாக நாளாந்த வருகைக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூ. 200 வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இது வரவு செலவுத் திட்ட உரையின் ஒரு முன்மொழிவு என்பதாலும், இது இன்னும் நிறைவேற்றப்படாததாலும், இதன் அமலாக்கம் ஜனவரி 2026-இல் தொடங்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும், இந்த வாக்குறுதி 'முன்னேற்றத்தில் உள்ளது' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

    2025 ஒக்டோபர் 13 அன்று, தோட்டத் தொழிலாளர்களின் நாட் வேதனத்தை உயர்த்துவது குறித்த முன்மொழிவு தொடர்பில், ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

    2025 நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக தனது பதவியில் இருந்து கொண்டு, பின்வருமாறு கூறினார்: "தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது சேவைகளுடன் ஒப்பிடத்தக்க நியாயமான நாளாந்த சம்பளமொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். ரூபா 1,350 கொண்ட தற்போதைய நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 2026 ஜனவரியில் இருந்து தொடக்கம் ரூபா 1,550 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். இவ் ரூபா 1,550 தொகை சம்பளத்திற்கு மேலதிகமாக, வேலைக்குச் சமூகமளிப்பதனை நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 200 தொகையினை அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுப்பதற்கு முன்மொழிகின்றோம். அதற்காக ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது".

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.news.lk/current-affairs/special-discussion-on-increasing-estate-workers-wages-presided-by-the-president
    2. https://www.treasury.gov.lk/api/file/0cbd85ce-0f8c-4a10-af3f-03bd0ae59e99

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    தோட்டங்களைச் சார்ந்த பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பித்தல்

    சமூகப் பாதுகாப்பு

    இந்த வாக்குறுதியானது, தோட்ட வீடமைப்புத் திட்டங்களை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளாக விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    தோட்டங்களை சார்ந்த பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள்
    முன்னேற்ற விபரங்கள்

    இந்த வாக்குறுதியானது, தோட்ட வீடமைப்புத் திட்டங்களை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளாக விளக்கப்படுகிறது. தேவையான வீடுகளின் எண்ணிக்கை தெளிவுபடுத்தப்படும் வரை, இது "முன்னேற்றத்தில் உள்ளது" என்ற நிலையில் இருக்கும். மலையக சமூகங்களுக்குப் பயனளிக்கும் வீடமைப்புத் திட்டங்களுக்கான உறுதிப்பத்திரங்கள் அல்லது உரிம ஆவணங்களை அரசாங்கம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியா-இலங்கை பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வீடமைப்பு ஆதரவை விரிவுபடுத்தியுள்ளதுடன், தோட்ட வீடமைப்பு முயற்சிகளுக்காக மேலதிக வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளையும் செய்துள்ளது.

    2025 ஒக்டோபர் 12 அன்று, இந்தியா-இலங்கை பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் (10,000 வீடுகள் திட்டத்தின் 4 ஆம் கட்டம்) 2,000 வீடுகளுக்கான ஆவணங்களை வழங்கும் நிகழ்வை அரசாங்கம் பண்டாரவளையில் நடத்தியது. இந்த வீடுகளுக்கான உரிமச் சான்றிதழ்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. இருப்பினும், விநியோகிக்கப்பட்ட சான்றிதழ்கள் முழுமையான சட்டபூர்வமான உறுதிப்பத்திரங்கள் அல்ல, அவை "உரிமம் வழங்கும் கடிதங்கள்" மட்டுமே என சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    2025 நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகத் தனது பதவியில் இருந்து கொண்டு, பின்வருமாறு கூறினார்: "இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலை யக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது".

    மேலும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இரண்டு மேலதிக திட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் கீழ் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், தோட்ட வீடமைப்புத் திட்டத்திற்காக ரூ. 100 மில்லியனும், இந்திய மானியம் உதவியுடனான வீடமைப்புத் திட்டத்திற்காக (முதலாம் கட்டம்) ரூ. 60 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மலையக சமூகத்தினர் நிரந்தர வீடுகளை அமைப்பதற்காக நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, 2024 செப்டம்பர் 21 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கோரி, 2025 பெப்ரவரி 28 அன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கு ஒரு தகவலறியும் உரிமை கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 2025 ஏப்ரல் 07 அன்று அந்த அமைச்சிடமிருந்து பெறப்பட்ட பதிலில், "அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் 725 பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.treasury.gov.lk/api/file/96100697-0492-4c66-b2a2-71aeafa23404
    2. https://www.news.lk/current-affairs/distribution-of-housing-entitlement-certificates-to-the-up-country-malayagam-community-tomorrow-in-bandarawela
    3. https://www.newswire.lk/2025/10/16/mano-accuses-govt-of-misleading-public-in-plantation-housing-project/
    4. https://x.com/JeevanThondaman/status/1977001454058582307
    5. https://www.treasury.gov.lk/api/file/0cbd85ce-0f8c-4a10-af3f-03bd0ae59e99
    6. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்சார விநியோகத்துடன் சேர்த்தல்

    ஏனையவை

    120 மெகாவாட் (MW) சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின்சார விநியோகத்துடன் சேர்த்தல்.
    முன்னேற்ற விபரங்கள்

    120 மெகாவாட் (MW) சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அதனுடன் தொடர்புடைய பரிமாற்றத் திட்டங்களுக்காக ரூ. 4 பில்லியனும், சூரிய மேற்கூரை முன்முயற்சிகளுக்காக ரூ. 1.5 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    2025 ஏப்ரல் 5 ஆம் திகதி,ஜனாதிபதி ஊடகப் பிரிவு, சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இது தேசிய மின் கட்டமைப்பிற்கு 50 மெகாவாட் (MW) சக்தியைச் சேர்க்கும்.

    2025 பெப்ரவரி 19 ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானம், திருகோணமலையின் சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான இரு-கட்ட நிகழ்ச்சித்திட்டத்தை உறுதிப்படுத்தியது. இதன்படி, முதலாம் கட்டத்தில் 50 மெகாவாட், மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்திற்கு ஓரளவு நிதியளிப்பதற்காக நிதி அமைச்சுக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியினால் (AIIB) வழங்கப்படும் இறையாண்மை ஆதரவுடனான கடனை உறுதிப்படுத்தும் திட்டச் சுருக்கம், முழுத் திட்டமும் தேசிய மின் கட்டமைப்பிற்கு 120 மெகாவாட் வரையான சூரிய சக்தியை வழங்கும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், AIIB இனால் முன்னெடுக்கப்படும் சம்பூர்-கப்பல்துறை மற்றும் ஹபரணை-கப்பல்துறை மின் விநியோக (பரிமாற்ற) அபிவிருத்தித் திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ. 2 பில்லியன் வீதம், மொத்தமாக ரூ. 4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 2026 ஆம் ஆண்டிற்கான சூரிய மேற்கூரைத் திரட்சி மற்றும் மெய்நிகர் வலைப்பின்னல் அளவீட்டுத் திட்டத்திற்காக ரூ. 1.5 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://pmd.gov.lk/news/president-and-indian-prime-minister-jointly-launch-and-inaugurate-three-development-projects/
    2. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=13039
    3. https://www.aiib.org/en/projects/details/2025/proposed/sri-lanka-sampur-solar-pv-power-project-financing.html
    4. https://www.aiib.org/en/projects/details/2025/_download/Sri-Lanka/PSI-P000799-Sri-Lanka-Sampur-Solar-PV-Power-Project-Financing.pdf
    5. https://www.themorning.lk/articles/ny26tyvuQIODh0T805kk
    6. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களில் 200 பேருக்கு, சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக புலமைப்பரிசில்களை வழங்குதல்

    ஏனையவை

    உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களில் 200 பேருக்கு, சர்வதேச ரீதியில் தரப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்காக......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    ஒவ்வொரு வருடமும், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களில் 200 பேருக்கு, சர்வதேச தரவரிசைப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக புலமைப்பரிசில்களை வழங்குதல்
    முன்னேற்ற விபரங்கள்

    உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களில் 200 பேருக்கு, சர்வதேச ரீதியில் தரப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்காக, ஐந்து வருட காலப்பகுதியில் புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதிகள் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட வரைவு மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    2025 ஜூலை 1 அன்று, சர்வதேச ரீதியில் தரப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்காக, ஐந்து வருட காலப்பகுதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 200 க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. இத்திட்டம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளதுடன், 20 முதல் 50 மாணவர்களைத் தெரிவு செய்வதன் மூலம் 2025 இல் ஆரம்பிக்கப்படும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடமிருந்து 2025 செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், உயர் தரவரிசைப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான புலமைப்பரிசில்களுக்காக ரூ. 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன், 2026 ஆம் ஆண்டிற்கான ஏனைய நாடுகளுடனான புலமைப்பரிசில் திட்டங்களுக்காக ரூ. 10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் ரூ. 20 மில்லியனாக இருந்தது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=13268
    2.https://tamil.dgi.gov.lk/about/contact/tender-notices/2025-07-01-am-tikati-anru-itamperra-amaiccaravaik-kuttattil-etukkappatta-tirmanankal
    3. https://mohe.gov.lk/images/pdf/200_English_web_notice.pdf
    4. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான ஒரு நிறுவனத்தை நிறுவுதல்

    ஊழல் எதிர்ப்பு

    குற்றச் செயல்களின் வரும்படிகளாகக் கருதப்படும் பணம் தூய்தாக்கல் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    திருடப்பட்ட அரசுச் சொத்துகளை மீட்டெடுக்க, திருடப்பட்ட சொத்து மீட்பு நிறுவனமான (STAR) மற்றும் ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் அலுவலகம் (UNODC) போன்றசர்வதேச அமைப்புகளின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை ஆதரவுடன் திருடப்பட்ட பொது சொத்து மீட்பு நிறுவனத்தை உருவாக்குதல்
    முன்னேற்ற விபரங்கள்

    குற்றச் செயல்களின் வரும்படிகளாகக் கருதப்படும் பணம் தூய்தாக்கல் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இது, குற்றச் செயல்களின் வரும்படிகள் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றச் செயல்களின் வரும்படிகள் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றை அமைப்பதற்கு வழிவகுக்கிறது. இதுவரை, அந்தப் பிரிவு மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படக்கூடிய அல்லது நீதிமன்ற ரீதியாக முடக்கப்படக்கூடிய சொத்துக்களின் குறைந்தபட்ச வரம்பானது, காவல்துறையினருடனும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடனும் இணைந்து அதிகாரசபையினால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதால், இது சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதைத் தடை செய்கிறது.

    2025 ஏப்ரல் 30 அன்று இயற்றப்பட்ட குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம் இல. 05/2025, குற்றச் செயல்களின் வரும்படிகள் முகாமைத்துவ அதிகாரசபை (PCMA), குற்றச் செயல்களின் வரும்படிகள் புலனாய்வுப் பிரிவு (PCID) மற்றும் குற்றச் செயல்களுக்குப் பலியானவர்களின் இழப்பீட்டு நம்பிக்கை பொறுப்பு நிதி (VCRTF) ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், இந்தச் சட்டம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) ஆணையை குற்றச் செயல்களின் வரும்படிகள் தொடர்பான விடயங்களில் செயற்படவும் விரிவுபடுத்துகிறது. இந்தச் சட்டம் 2025 மே 27 ஆம் திகதியிட்ட அதி விசேஷ வர்த்தமானி இல. 2438/24 மூலம் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

    குற்றச் செயல்களின் வரும்படிகள் புலனாய்வுப் பிரிவு (PCID) 2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) சட்டவிரோதப் பணச் சலவை பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் பிரிவானது ஏற்கெனவே 2023 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டுவிட்டது.

    தற்போது, குற்றச் செயல்களின் வரும்படிகள் முகாமைத்துவ அதிகாரசபை (PCMA) அமைக்கப்பட்டுவிட்டதையோ அல்லது அது தனது செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதையோ குறிக்கும் எந்தவொரு பொதுவில் கிடைக்கக்கூடிய ஆதாரமும் இல்லை.

    CIABOC இன் தலைவரான நீதிபதி நீல் இத்தவள மற்றும் வியன்னாவில் உள்ள உலக வங்கி மற்றும் StAR (Stolen Asset Recovery Initiative) அமைப்புகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், இந்த சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளை வழங்குவதற்குத் தயாராக இருப்பதைக் குறிக்கின்றன. மின்னணுச் சொத்து தேடல் கருவிகள் மற்றும் புலனாய்வாளர்களுக்கான பயிற்சி போன்ற துறைகளில் இந்த உதவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.parliament.lk/uploads/documents/hansard/1747715041076408.pdf
    2. https://documents.gov.lk/view/acts/2025/4/05-2025_T.pdf
    3. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-24_T.pdf
    4. https://ciaboc.gov.lk/media-centre/latest-news/1221-a-special-unit-established-at-ciaboc-to-investigate-allegations-of-money-laundering
    5. https://mfa.gov.lk/en/sri-lankas-ciaboc-chairman-meets-world-bank-officials-on-strengthening-asset-recovery-framework/#:~:text=Looking%20ahead%2C%20CIABOC%20and%20the,to%20institutionalize%20asset%20recovery%20mechanism
    6. https://www.ft.lk/news/Switzerland-pledges-support-for-Sri-Lanka-s-asset-recovery-and-anti-corruption-efforts/56-772214
    7. https://ceylontoday.lk/2025/10/21/proceeds-of-crime-investigation-division-launched-massive-rs-10b-money-trail-uncovered/?fbclid=IwdGRzaANj7PtjbGNrA2PsU2V4dG4DYWVtAjExAAEe7kFv82GulAnYEO1ag7H-_ngTsPrbhACpvohviNf_okKNVeJSt8zIfFYB0Gs_aem_igFUrnACZR17xixoaneAgw&sfnsn=wa

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அரசாங்கத்தின் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதை உறுதிசெய்தல்

    ஊழல் எதிர்ப்பு

    தேசிய பெறுகைக் வழிகாட்டல்கள் ஊழல் எதிர்ப்புச் சட்டத்துடன் சேர்த்து, நலன்களுக்கு இடையேயான முரண்களை எடுத்துரைக்கின்றன; ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அவை குறிப்பாகத் தடை செய்யவில்லை......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வணிக நடவடிக்கைகள் அல்லது ஒப்பந்தங்களில் ஈடுபடுவதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தடுப்பதை உறுதிசெய்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    தேசிய பெறுகைக் வழிகாட்டல்கள் ஊழல் எதிர்ப்புச் சட்டத்துடன் சேர்த்து, நலன்களுக்கு இடையேயான முரண்களை எடுத்துரைக்கின்றன; ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அவை குறிப்பாகத் தடை செய்யவில்லை. இது தொடர்பான ஒழுங்குவிதிகளை இன்னும் வெளியிடவில்லை.

    2024 நவம்பர் 25 ஆம் திகதியிட்ட அதி விசேஷ வர்த்தமானி இல. 2412/01 இல் வெளியிடப்பட்டு, 2025 ஜனவரி 7 அன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பெறுகைக் வழிகாட்டல்கள், முந்தைய பெறுகைக் கட்டமைப்பை நீக்கி அதற்குப் பதிலாக நடைமுறைக்கு வந்துள்ளன.
    இந்த வழிகாட்டல்கள், " பொதுத்துறைப் பெறுகை நடைமுறையுடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும், எந்தவொரு தனிநபரும், இவ்வாறான எந்தவொரு அக்கறை முரண்பாட்டையும் உரிய பெறுகைச் செயற்பாடு தொடங்குவதற்கு முன்னதாகவே உரிய அதிகாரியிடம் வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்". மேலும், "இவ்வாறு, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 107 கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்றும் கூறுகிறது. இருப்பினும், இந்தப் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகளை இன்னும் வெளியிடவில்லை. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வர்த்தகங்கள் அல்லது ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு முழுமையான தடையை விதிக்கும் வரையில் இந்த வழிகாட்டல்கள் முழுமை அடையவில்லை.

    25 நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது, சனாதிபதி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக தனது பதவியில் இருந்து கொண்டு, பின்வருமாறு குறிப்பிட்டார்: "தொடர்ந்தும், ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையினை பலப்படுத்துவதற்கும், இலத்திரனியல் பெறுகை முறைமையினை நிர்மாணிப்பதன் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாமலாக்கப்படும்". மேலும், "ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் நிறுவன வலையமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, 2026 ஜனவரி மாதமாகும் போது செயல்பாட்டு பயனுரிமை ஆவணகமொன்றை அறிமுகம் செய்வதனூடாக நிதி சுத்திகரிப்பு எதிர்ப்புப் பணிச்சட்டத்தைப் பலப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்".

    மூலம்/மூலங்கள்:
    1. https://documents.gov.lk/view/extra-gazettes/2024/11/2412-01_T.pdf
    2. https://parliament.lk/uploads/documents/hansard/1736487038022510.pdf
    3. https://documents.gov.lk/view/acts/2023/8/09-2023_T.pdf
    4. https://www.treasury.gov.lk/api/file/6dcc7475-cdf4-4c15-b167-0767ae17330b

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல்

    ஆளுகை

    பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றாக, 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பிலான புதிய சட்டமூல வரைவு, கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்தல் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதி செய்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றாக, 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பிலான புதிய சட்டமூல வரைவு, கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் தொடர்கின்றன.

    2025 பெப்ரவரி 21 ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானம், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைபை மறுபரிசீலனை செய்வதற்கும், மேலும் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஒரு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

    புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைபு செய்யும் போது கருத்திற் கொள்வதற்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவது குறித்து வெறும் 14 நாட்களில் பொதுமக்களின் கருத்துக்களைக் கோரி 2025 மே 16 அன்று அரசாங்கம் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது. 2025 நவம்பர் 13 அன்று, குறித்த குழுவின் அறிக்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவிடம் கையளிக்கப்பட்டது.

    "பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்" எனும் தலைப்பிலான சட்டமூல வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் இணையதளத்தில் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் இது குறித்த கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்றத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் 2025 செப்டம்பர் ஆரம்பத்தில் நீக்கப்பட்டு, புதிய சட்டமூலத்தால் பிரதியிடப்படும் என்று கூறினார். இந்த உறுதிப்பாட்டை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை.

    இதற்கிடையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் தொடர்கின்றன. 2025 மார்ச் 7 அன்று, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்பட்டு, அதிகாரிகள் மொஹமட் லியவுதீன் மொஹமட் ருஸ்டியை கைது செய்தனர். நீதிமன்றம் அவருக்கு 2025 ஏப்ரலில் பிணை வழங்கியது. 2024 ஒக்டோபரில், இஸ்ரேலுக்கு எதிரான இன்ஸ்டாகிராம் பதிவைக் காரணம்காட்டி, மொஹமட் ரிஃபாய் மொஹமட் சுஹைல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒன்பது மாத தடுப்புக் காவலுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=ta&dID=13046
    2. https://www.moj.gov.lk/images/Careers/2025/Bills/12-12/Terrorsim-BillT.pdf
    3. https://www.parliament.lk/uploads/documents/hansard/1756894696039492.pdf
    4. https://www.dailymirror.lk/breaking-news/Student-held-under-PTA-for-nine-months-to-be-produced-in-court/108-313746
    5. https://www.ft.lk/news/HRCSL-recommends-Public-Security-Ministry-to-pay-Rs-200-000-to-Rusdi-for-violating-fundamental-rights/56-777706
    6. https://www.dailymirror.lk/breaking_news/Committee-submits-report-recommending-repeal-of-PTA/108-324892
    7. https://moj.gov.lk/index.php?option=com_content&view=article&id=769:protection-of-the-state-from-terrorism-bill&catid=23:special-notice&Itemid=241&lang=en

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    இணையப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி, கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல்

    ஆளுகை

    இந்த வாக்குறுதியானது, இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள பேச்சுச் சுதந்திரத்திற்கான நியாயமற்ற தடைகளை நீக்குவதற்கான திருத்தங்களாக விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் 2024 ஆம் ஆண்டு 09 ம் இலக்க இணைய பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துதல்
    முன்னேற்ற விபரங்கள்

    இந்த வாக்குறுதியானது, இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள பேச்சுச் சுதந்திரத்திற்கான நியாயமற்ற தடைகளை நீக்குவதற்கான திருத்தங்களாக விளக்கப்படுகிறது. இணையப் பாதுகாப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    இணையப் பாதுகாப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து, திருத்தங்களுக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, 2025 மே 25 அன்று அமைச்சரவையால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. 2025 ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் பங்களிக்குமாறு அந்தக் குழு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.

    இதற்குத் தனியாக, 2025 மே 8 அன்று, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இணையப் பாதுகாப்பு (நீக்கம்) சட்டமூலத்தை முன்வைத்தார். இது அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவில்லை.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13192
    2. https://documents.gov.lk/view/bills/2025/5/590-2025_T.pdf
    3. https://www.newswire.lk/2025/08/13/public-media-invited-to-comment-on-online-safety-act-amendments/

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த காலங்களில் நடந்த அரசியல் படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் காணாமல் போதல்கள் குறித்து விசாரணைகளை முடித்து நீதி வழங்குதல்

    சட்டம் மற்றும் ஒழுங்கு

    இந்த வாக்குறுதியானது, காணாமல்போன சம்பவங்கள் அல்லது படுகொலைகள் தொடர்பான முக்கிய, அடையாளப்பூர்வமான வழக்குகளிலாவது விசாரணைகளை மேற்கொண்டு, அவற்றை புதுப்பித்தல் அல்லது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தல் என்று விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த காலங்களில் நடந்த அரசியல் படுகொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து விசாரித்து நீதி வழங்குதல்
    முன்னேற்ற விபரங்கள்

    இந்த வாக்குறுதியானது, காணாமல்போன சம்பவங்கள் அல்லது படுகொலைகள் தொடர்பான முக்கிய, அடையாளப்பூர்வமான வழக்குகளிலாவது விசாரணைகளை மேற்கொண்டு, அவற்றை புதுப்பித்தல் அல்லது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தல் என்று விளக்கப்படுகிறது.

    பிரகீத் எக்னெலிகொட, கீத் நொயார், லசந்த விக்ரமதுங்க மற்றும் ரவீந்திரநாத் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் மீண்டும் திறக்கப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஐ.நா.வில் பலவந்தமாக காணாமலாக்கப்படுவது தொடர்பான சாசனத்திற்கு இலங்கை தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. செம்மணிப் படுகொலை வழக்கில் சடலங்களை அகழும் பணி தொடரும் என்றும் அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

    2025 செப்டம்பர் 26 அன்று, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், ஜெனீவாவில் நடைபெற்ற பலவந்தமாக காணாமலாக்கப்படுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபைக் குழுவின் (CED) 29 ஆவது அமர்வில், அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தின் கீழ் இலங்கையின் ஆரம்ப அறிக்கையை சமர்ப்பித்தார். இது சாசனத்தின் மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

    கீத் நொயார் கடத்தல், பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை, மற்றும் லசந்த விக்ரமதுங்க படுகொலை உட்பட சில அடையாளப்பூர்வமான மற்றும் முக்கிய வழக்குகளில் புதுப்பிக்கப்பட்ட முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தால் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    1. பிரகீத் எக்னெலிகொட வழக்கு - CID பணிப்பாளர் ஷானி அபேசேகர ஒரு சாட்சியாக பெயரிடப்படுவார் என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

    2. கீத் நொயார் வழக்கு - CID விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளதுடன், முன்னாள் இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    3. லசந்த விக்ரமதுங்க வழக்கு - CID விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது. இருப்பினும், சந்தேக நபர்கள் சிலர் 2025 இன் ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டனர்.

    4. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் சிவசப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல்போனமை தொடர்பில், சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான் என்றும் அழைக்கப்படுபவர்) உட்பட சந்தேக நபர்கள் CIDயால் கைது செய்யப்பட்டனர்.

    செம்மணிப் படுகொலை அகழ்வுகள் தொடர்பாக, அகழ்வுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாக வந்த ஊடகச் செய்திகளை மறுத்து, அகழ்வுப் பணிகள் தொடரும் என நீதி அமைச்சு செப்டம்பர் 2025 இல் அறிவித்தது. செம்மணிப் படுகொலைகள் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று சனாதிபதி 2025 செப்டம்பர் 1 அன்று தெரிவித்தார்.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.cpalanka.org/revisiting-ten-emblematic-cases-in-sri-lanka-why-justice-remains-elusive/
    2. https://www.newswire.lk/2025/09/30/sri-lanka-reaffirms-commitment-to-un-committee-on-enforced-disappearances/
    3. https://www.ohchr.org/en/meeting-summaries/2025/09/experts-committee-enforced-disappearances-welcome-sri-lankas-law-0
    4. https://hirunews.lk/goldfmnews/416361/lasantha-wickrematunges-murder-investigation-reopened
    5. https://tamilguardian.com/index.php/content/two-former-sri-lanka-army-intelligence-officers-arrested-over-abduction-and-torture-keith
    6. https://www.newsfirst.lk/2025/07/16/prageeth-ekneligoda-disappearance-shani-included-in-evidence-list
    7. https://www.newswire.lk/2024/10/12/new-govt-orders-special-inquiry-into-7-high-profile-cases/
    8. https://www.newswire.lk/2025/04/12/pillayan-detained-under-pta-for-90-days/

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி உடனடி சட்ட நடவடிக்கை எடுத்தல்

    சட்டம் மற்றும் ஒழுங்கு

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு இரட்டைப் படுகொலை விசாரணையைத் திசைதிருப்பியமைக்காக, ஒரு பொலிஸ் பரிசோதகர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    2019-04-21 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுத்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு இரட்டைப் படுகொலை விசாரணையைத் திசைதிருப்பியமைக்காக, ஒரு பொலிஸ் பரிசோதகர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இவரது நடவடிக்கை காரணமாகவே, பின்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளை நடத்திய உண்மைக் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடிந்தது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://srilankamirror.com/news/cid-arrests-police-inspector-over-easter-attacks/

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    சமத்துவம், ஜனநாயகம், மற்றும் உள்ளூர், மாவட்ட, மாகாண மட்டங்களுக்கு விரிவான அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பொன்றை இயற்றுதல்

    ஆளுகை

    முன்னேற்றம் குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்து குடிமக்களின் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல். இந்த முயற்சி 2015 இல் தொடங்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை. முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தையும், ஒவ்வொரு உள்ளூர் அரசாங்கத்திற்கும், மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தைப் பரவலாக்குவதையும் உறுதி செய்யும், இதனால் அனைத்து மக்களும் ஒரே நாட்டிற்குள் ஆட்சியில் ஈடுபட முடியும்
    முன்னேற்ற விபரங்கள்

    முன்னேற்றம் குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை (DSA) தயாரித்தல்

    சமூகப் பாதுகாப்பு

    மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வுக்கான (DSA) முன்னேற்றம் குறித்த ஆதாரம் இல்லை... ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    கடன் நிலைத்தன்மையைப் பராமரிக்கும் நோக்கத்துடன், தேவையெனில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடரவும், தட்டுப்பாடின்றி வட்டி செலுத்தக்கூடியதொரு நிலையை உறுதி செய்யவும் மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) ஒன்றைத் தயாரிக்க வேண்டும்
    முன்னேற்ற விபரங்கள்

    மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வுக்கான (DSA) முன்னேற்றம் குறித்த ஆதாரம் இல்லை.

    அப்படி ஒரு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் கீழ் உள்ள கடன் இலக்குகள் திருத்தப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக, மிகச் சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுகள் உட்பட, கிடைக்கப்பெறும் அனைத்துத் தகவல்களும், மார்ச் 2023 இல் நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்குகள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இது, மாற்று கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதைக் கடுமையாகச் சுட்டிக்காட்டுகிறது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.imf.org/en/Publications/CR/Issues/2025/07/02/Sri-Lanka-Fourth-Review-Under-the-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-568271

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    இலங்கையில், கடந்த அரசாங்கங்களால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான கடன் தணிக்கையை நடத்துதல்

    பொருளாதார சீர்திருத்தம்

    வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான கடன் தணிக்கை நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னைய அரசுகளால் பெறப்பட்டுள்ள வெளிநாட்டு கடன்களைப் பற்றிய விரிவான கடன் தணிக்கையை மேற்கொண்டு, பொது நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனால் கடன்களை தவறாக பயன்படுத்தியவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான கடன் தணிக்கை நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

    நிதியமைச்சோ அல்லது வேறு நம்பகமான மூலங்களோ அவ்வாறானதொரு தணிக்கை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல்

    ஆளுகை

    முன்னேற்றம் குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, பாராளுமன்றத்தால் நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாத ஜனாதிபதியை நியமித்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    முன்னேற்றம் குறித்த தகவல் எதுவும் காணப்படவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல்

    சட்டம் மற்றும் ஒழுங்கு

    இந்த வாக்குறுதியானது, இன மோதலின் போதும் அது தொடர்பாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதாக விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து அவர்களின் சுதந்திரமான சமூகமயமாக்கலை உறுதி செய்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    இந்த வாக்குறுதியானது, இன மோதலின் போதும் அது தொடர்பாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட கைதிகளை விடுதலை செய்வதாக விளக்கப்படுகிறது.

    நவம்பர் 2024 இல், வவுனியாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஜனாதிபதி, உறுதியளித்தார். இருப்பினும், இந்த உறுதிமொழி குறித்த முன்னேற்றத்தைக் காட்டும் எந்தவொரு தகவலையும் அரசாங்கம் வெளியிடவில்லை.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.sundayobserver.lk/2025/03/02/news-features/46458/sri-lankas-pta-political-prisoners-and-the-fight-for-justice/
    2. https://www.dailymirror.lk/breaking-news/President-assures-release-of-political-prisoners-northern-lands-captured-by-security-forces/108-295656

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    குறுகிய காலத்திற்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது 3% ஆக, சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் செலவீனத்தை படிப்படியாக அதிகரித்தல்

    பொருளாதார சீர்திருத்தம்

    2026 ஆம் ஆண்டுக்கான குடிமக்கள் வரவு செலவுத் திட்டத்தின்படி (Citizen Budget), சுகாதாரத் துறைக்கான துறைசார் ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.90% (ரூ. 654 மில்லியன்) ஆகும்......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    குறுகிய காலத்திற்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது 3% ஆக, சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் செலவீனத்தை படிப்படியாக அதிகரித்தல்
    முன்னேற்ற விபரங்கள்

    2026 ஆம் ஆண்டுக்கான குடிமக்கள் வரவு செலவுத் திட்டத்தின்படி (Citizen Budget), சுகாதாரத் துறைக்கான துறைசார் ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.90% (ரூ. 654 மில்லியன்) ஆகும். இது 2025 ஆம் ஆண்டு குடிமக்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1.89% (ரூ. 604 மில்லியன்) உடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய உயர்வாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற இலக்கை எட்டுவதற்கு, அரசாங்கம் 2026 முதல் 2029 வரையிலான நான்கு ஆண்டுகளில் சுகாதாரச் செலவினத்தை ஆண்டுக்கு சராசரியாக 0.28% புள்ளிகள் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2026 ஆம் ஆண்டில் காணப்பட்ட அதிகரிப்பு வெறும் 0.01% புள்ளிகள் மட்டுமே ஆகும்

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.treasury.gov.lk/api/file/91bae993-5489-4dda-9c19-74d8f5dc4439
    2. https://www.treasury.gov.lk/api/file/806f5cd4-f5fe-47da-8284-912658d73bd0
    3. https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2024/statistical-appendix

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    பாடசாலை மாணவர்களின் தேசியப் பரீட்சைப் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் மதிப்பீடு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படுதல்

    ஏனையவை

    பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தற்போது கிடைக்கப்பெறும், 2018 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள பரீட்சை அட்டவணையில் மாதாந்தப் பரீட்சை அட்டவணைகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    தேசிய பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுவதையும், பெறுபேறுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படுவதையும் உறுதி செய்வதற்கான வருடாந்தப் பாடசாலைக் கால அட்டவணை.
    முன்னேற்ற விபரங்கள்

    பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தற்போது கிடைக்கப்பெறும், 2018 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள பரீட்சை அட்டவணையில் மாதாந்தப் பரீட்சை அட்டவணைகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன; பாடசாலை மட்ட தேசியப் பரீட்சைகளுக்கான காலக்கெடுக்கள் எதுவும் இதில் உள்ளடக்கப்படவில்லை. இரண்டு மாதங்களுக்குள் எந்தவொரு இரண்டாம் நிலை கல்வி தேசியப் பரீட்சைப் பெறுபேறுகளும் வெளியிடப்படவில்லை.

    தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து, இரண்டு தேசியப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன: உயர்தரப் பரீட்சை (A/L) மற்றும் சாதாரண தரப் பரீட்சை (O/L). இரண்டு பரீட்சைகளின் பெறுபேறுகளும் வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டு மாத காலக்கெடுவைத் தாண்டி வெளியிடப்பட்டுள்ளன.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.doenets.lk/examcalendar
    2. A/L examinations in November 2024: https://www.doenets.lk/images/resources/NEWS/AL%20Time%20Table%202025_1755235159873.pdf
    3. A/L results in April 2025: https://www.gazette.lk/2025/04/al-results-release-date-2024-2025-www-doenets-lk.html
    4. O/L examinations in March 2025: https://www.doenets.lk/images/resources/NEWS/OL%20timetable%20English%20-%202024%202025_1738224672031.pdf

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகளின் நோக்கத்தை, இனவாதம் மற்றும் மத தீவிரவாதத்தை உள்ளடக்குமாறு விரிவுபடுத்துதல்

    சமூகப் பாதுகாப்பு

    இந்த வாக்குறுதியானது, சட்டத்தின் மூலம் ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதாகவும், அதன் அதிகார வரம்பை விரிவுபடுத்துவதாகவும் விளக்கப்படுகிறது......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    இனவாதம் மற்றும் மத தீவிரவாதத்தால் ஏற்படும் வன்முறைச் செயல்களை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைகுழுவின் பணிகளை விரிவுபடுத்துதல்
    முன்னேற்ற விபரங்கள்

    இந்த வாக்குறுதியானது, சட்டத்தின் மூலம் ஓர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதாகவும், அதன் அதிகார வரம்பை விரிவுபடுத்துவதாகவும் விளக்கப்படுகிறது.

    சத்தியம் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) அமைக்கப்படுவதற்குச் சட்டம் நிறைவேற்றப்படாமலேயே, அது முன்னர் உருவாக்கப்பட்டது. ஒரு சட்டம் இன்னமும் இயற்றப்படவில்லை.

    2025 செப்டம்பர் 8 அன்று இடம்பெற்ற 60 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் (UNHRC) கூட்டத்தொடரின் போது, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், அரசாங்கம் ஒரு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார். இருப்பினும், இந்தச் செயல்முறை குறித்த குறிப்பிட்ட விவரங்கள் பொதுமக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.un.int/srilanka/news/statement-delivered-hon-vijitha-herath-minister-foreign-affairs-foreign-employment-and-tourism
    2. https://www.parliament.lk/uploads/bills/gbills/gazette/tamil/6337.pdf
    3. https://www.ohchr.org/sites/default/files/documents/hrbodies/hrcouncil/sessions-regular/session60/advance-version/a-hrc-60-21-auv.pdf

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    கிடைக்கும் முறைப்பாடுகளை CIABOC ஆனது ஆறு (06) மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும்; அல்லது மீதமுள்ள முறைப்பாடுகள் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல்

    ஊழல் எதிர்ப்பு

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செயல்திறன் அறிக்கைகள் மற்றும் இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) வழக்குகளை மீளப் பெற்றமை குறித்த ஒரு தனி அறிக்கை இருந்தபோதிலும்......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை ஆறு (06) மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படாத முறைப்பாடுகள் குறித்து ஒவ்வொரு ஆறு (06) மாதங்களுக்கும் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
    முன்னேற்ற விபரங்கள்

    பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செயல்திறன் அறிக்கைகள் மற்றும் இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) வழக்குகளை மீளப் பெற்றமை குறித்த ஒரு தனி அறிக்கை இருந்தபோதிலும், பெறப்பட்ட முறைப்பாடுகள் அல்லது கவனிக்கப்படாத முறைப்பாடுகள் பற்றிய தகவல்கள் அந்த அறிக்கைகளில் உள்ளடக்கப்படவில்லை.

    2025 ஆம் ஆண்டில், இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) பின்வரும் மூன்று அறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது:

    A. 2024 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான செயல்திறன் அறிக்கை – 2025 பெப்ரவரி 20 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

    B. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான செயல்திறன் அறிக்கை – 2025 பெப்ரவரி 20 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

    C. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான செயல்திறன் அறிக்கை – 2025 பெப்ரவரி 20 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

    எனினும், இந்த அறிக்கைகள் ஆணைக்குழுவினால் தீர்க்கப்படாத அல்லது கவனிக்கப்படாத முறைப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கவில்லை.

    CIABOC இனால் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கை, மீளப் பெறப்பட்ட 34 வழக்குகளையும், அவற்றை மீளப் பெற்றதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறது.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.parliament.lk/uploads/documents/paperspresented/1741165060029911.pdf
    2. https://www.parliament.lk/uploads/documents/paperspresented/1741165275072247.pdf
    3. https://www.parliament.lk/uploads/documents/paperspresented/1741165341028336.pdf
    4. https://www.ciaboc.gov.lk/images/pdf/2025/Withdrawn_Cases_20250228.pdf

  • தோல்வியடைந்தது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Nov 2025

    ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல்

    ஆளுகை

    தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற ஒரு வருட காலப்பகுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள், மக்கள் ஆட்சியில் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், ஒரு வருடத்திற்குள் நடத்தப்படும்
    முன்னேற்ற விபரங்கள்

    தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற ஒரு வருட காலப்பகுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

    மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் சட்டகங்கள் மற்றும் தேர்தல் முறை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால், 2026 ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெறும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

    2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மதிப்பீட்டில், தேர்தல்களை நடத்துவதற்காக ரூ. 5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் உள்ள ரூ. 20 பில்லியனுடன் முரண்படுகிறது; இது 2024 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுடன் தொடர்புடைய செலவினங்களைக் குறிக்கிறது.

    மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்காக ஒரு விசேட தெரிவுக் குழு நியமிக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    மூலம்/மூலங்கள்:
    1. https://www.parliament.lk/uploads/documents/hansard/1761646051083547.pdf
    2. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026
    3. https://www.newswire.lk/2025/11/15/provincial-council-elections-update-from-govt/

Subscribe for Manthri.lk

Please submit your details to subscribe for Manthri.lk newsletter.